November 2, 2009

விழி வழியே , விழி வழியே , உயிர் வழிய கண்டேனே !!

விழி வழியே , விழி வழியே , உயிர் வழியக் கண்டேனே ..
என் முன்னே , என் முன்னே , என் மனதைக் கண்டேனே ..

விழி வழியே என் உயிர் வழிந்தாலும்
என் மனமும் நிறைவது எப்படி ??
குறைய குறைய நிறையும் உயிரை
உன் நினைவும் கொடுப்பது எப்படி ??

விழி வழியே . விழி வழியே மனம் கசியக் கண்டேனே ,,
கண் முன்னே , கண் முன்னே , என் கனவைக் கண்டேனே .,

உன்னை பற்றி நினைப்பது எல்லாம்
இந்த நிலவுக்கும் எப்படி தெரியும் ???
அந்த நினைவுகள் மனதில் மறையும் முன்னே ,
அவை நிலவில் படமாய் தெரியும் ..

விழி வழியே , விழி வழியே ஓர் கவிதைக் கண்டேனே ..
மனம் முழுதும் ,மனம் முழுதும் அதன் பெயரை கொண்டேனே ..

நீயும் நானும் பேசுவது எல்லாம் ,
கடல் அலைக்கும் எப்படி தெரியும் ??
தனிமையில் நானும் நடக்கையில்
அவைகளும் உன் போல் என்னிடம் பேசும் ..

விழி வழியே , விழி வழியே , உயிர் வழியக் கண்டேனே ..
என் முன்னே , என் முன்னே , என் மனதைக் கண்டேனே ..

- பித்தன்

அயன் பட பாடல் " விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் .." கேட்கும் பொழுது தோன்றியது :)

September 3, 2009

எதில் இன்பம் ??

தேடும் பொழுது கிடைப்பதில்லை ,
கிடைக்கும் பொழுது தேவையில்லை
கிடைக்காத ஒன்றை தேடுவதில் இன்பமா ??
இல்லை தேடுவது கிடைப்பதில் இன்பமா ??

இருக்கும் பொழுது விருப்பம் இல்லை,
விரும்பும் பொழுது இருக்கவில்லை
இல்லாத ஒன்றில் மேல் இருக்கும் விருப்பம் தான் இன்பமா ??

அருகில் இருந்தால்
அணைக்கமட்டோம்,
தொலைவில் இருந்தால் மறக்க மாட்டோம் ,
அனைப்பதை விட தொலைவில் இருந்து நினைப்பது தான் இன்பமா ??


- பித்தன்

July 13, 2009

உன் கடைக் கண்ணின் மொழி புரியாமல் !!

கடல் அலையின் தாபம் உணர்கிறேன் ,
அலையும் முகிலின் சோகம் அறிகிறேன் ,
தூங்கா நிலவின் தனிமையை கலைக்கிறேன் ,

சித்திரை கதிரின் தாகம் கொள்கிறேன் ,
ஆடி காற்றை மனதில் அடைக்கிறேன் ,
மார்கழியிலும் கோடை காண்கிறேன் ,


உன் கடைக் கண்ணின் மொழி புரியாமல் !!

- பித்தன்

June 13, 2009

நினைவலைகள்

தேதி : பத்து வருடங்களுக்கு முன் ஒரு நாள்

இடம் : எனது வீடு

காலை 4.30 :

"பிரசன்னா , எந்திரி அலாரம் அடிக்குது பார் , ஆப் பண்ணு "

"அம்மா , ஒரு 5 நிமிஷம் கழிச்சி எழுப்பி விடுங்க அம்மா , ப்ளீஸ் "

"டேய் இப்போ எந்திரிக்க , போறியா இல்லையா , படிக்க வேண்டாமா ?? , நல்ல தூங்கின மட்டும் போதுமா ?? , எந்திரிச்சு போய் பால் வாங்கிட்டு வா , காப்பி போட்டு தரேன் "

காலை 5.30 :

அம்மா வாசல் தெளிச்சு , கோலம் போட்டுட்டு வந்த பின் ,

"டேய் , என்ன book கையில வச்சு கிட்டு தூங்கற ?? "

" இல்ல மா , இப்போ தான் lighta , படிக்கிறேன் மா "

காலை 6.30 :

டிரிங் டிரிங் ( போன் அடிக்குது )

" பிரசன்னா , யாருன்னு கேளு "

" ஹலோ , யாரு பேசுறது அண்ணே ? "

" அம்மா , ஷக்தி லாரி செட்டு அம்மா , அய்யாவ கேக்குறாங்க "

" லாரி செட்டா , லோடு இருந்த கூபிடரனு சொல்லு "

" லெட்சுமி , வடுவகுடி லேந்து போன் வந்துச்சா ?? லோடு எத்தியசாம ?? " - இது அப்பா

"நைட் 3.30 மணிக்கு போன் பண்ணாங்க 50 மூட்டை குறையுதுன்னு சொன்னாங்க "

"மதுரை வண்டிக்கு பில்லு போட்டாச்சா " - அப்பா

"நைட்டு 1.30 மணிக்கு போட்டு அனுபியாச்சு "

காலை 7.30 :

" டேய் என்ன இன்னும் நெளிச்சு கிட்டு இருக்க , போய் uniform போடு " - அம்மா

" அம்மா என்னோட பனியன் எங்கமா ? " - இது நான்

" அம்மா என்னோட தமிழ் புக் எங்கமா ? " - இது கோபி

"லட்சுமி , துண்டு கொடு " - இது அப்பா

" இந்தாங்க துண்டு , பிரசன்னா இந்தா பனியன் , எல்லாம் உனக்கு கையல கொடுக்கும் , அவன் book தேடி கொடு "

காலை 8.00 :

" அம்மா , இன்னைக்கு என்ன சாப்பாடு ? " - கோபி

" இட்லி , குருமா டா "

" என்ன மா டெய்லி இட்லி " - கோபி

"டேய் டிவி பாக்காம சீக்கரம் சாபிட்டு விடு , கடைக்கு போகணும் " - அம்மா ..

====================================================================================
இது வரை நான் பார்த்ததில் , எங்க அம்மாவை போல ஒரு கடின உழைப்பாளியை நான் பார்த்து இல்லை. எனது அப்பா ஒரு சிறு நெல் வியாபாரி . அம்மாவும் அப்பாவுக்கு வியாபாரத்தில் ஒத்தாசையா இருப்பாங்க. இருவரும் எப்போ தூங்குவாங்க , எப்போ எந்திரிபாங்க என்று எனக்கு தெரியவே தெரியாது . ஆனால் நானும் தம்பியும் அதை உணர்ந்ததே இல்லை , எங்களுக்கு வேண்டியது சரியான நேரத்தில் வந்து கொண்டு இருக்கும் . எப்படி சமளிசாங்கனு இப்ப நினைச்ச ரொம்ப மலைப்பா இருக்கு

அவர்களிடம இருந்து நான் பெற விரும்பும் பண்புகளில் ஒன்று , சுய நலம் பாராமல் உழைப்பது .

பி.கு :
லெட்சுமி - அம்மா
கோபி - தம்பி
வடுவகுடி - பக்கத்து ஊர்
லோடு - நெல் லோடு

May 19, 2009

The clarifications from Mr. Pathmanathan in http://tamilnet.com/

War crime in the massacre of LTTE officials

[TamilNet, Tuesday, 19 May 2009, 01:52 GMT]
While rejecting Colombo's claim of the killing of LTTE leader V. Pirapaharan and assuring his safety and well-being, LTTE's International Relations Head S. Pathmanathan Tuesday accused Colombo of treachery in the killing of the political wing leaders B. Nadesan and S. Puleedevan. Mr. Pathmanathan said it is a crime against humanity that needs to be investigated. Meanwhile, informed sources told TamilNet that what happened in the early hours of Monday was a well-planned massacre of several unarmed civil officers of the LTTE with the aim of annihilating its political structure. At the orders of a 'top defence figure,' an international arrangement involving ICRC, European diplomats and a Colombo government diplomat to arrange safe exit to the civil officers was defied, the sources said.

Political observers compared Monday's massacre with the prison massacre of Tamil liberation fighters in 1983 and events leading to the collective death of 12 senior leaders and cadres of the LTTE in 1987.

Tamil circles also commented that any surrender of the LTTE as pressed by the International Community would have seen a similar fate to its cadres, had it been heeded.

The clarifications from Mr. Pathmanathan follow:

Statement 1:

I wish to inform the Global Tamil community distressed witnessing the final events of the war that our beloved leader Velupillai Pirapaharan is alive and safe. He will continue to lead the quest for dignity and freedom for the Tamil people.

The President and the Government of Sri Lanka needing to carry on and gloat in the planned Victory Celebrations on Tuesday, had their military establishment deliberately come up with the story detailing the demise of the leader of the LTTE. We categorically reject this and wish to inform the Tamil community to be vigilant and to exercise maximum restraint whilst grieving for the loss of Tamil civilian lives in the barbaric conduct of the final chapters of this battle.

The Tamil freedom struggle is a just cause and will not be quashed by the events of the last 24 hours. Truth and justice will always prevail.

Statement 2:

We wish to bring to the notice of the International Community the events of the last 24 hours in the so called safety zone in the war in Sri Lanka.

Subsequent to our announcement that the LTTE had decided to "silence the guns" in view of the unbearable civilian carnage at the hands of the Sri Lankan military and the heavy weaponry donated to it by third parties, we were informed by some member states of the International Community that arrangements had been made with the Sri Lankan military for discussions on an orderly end to the war.

We were instructed to make contact with the 58th Division of the Sri Lankan forces in the war zone, un-armed and carrying white flags. Head of our Political Wing, Mr. B. Nadesan and Mr. Puleedevan then proceeded to do so. They were un-armed and carrying white flags and were called on by the Officers of the 58th Division to come forward for discussions. When they complied they were both shot and killed. We vehemently condemn this action. The International Community needs to take this into account in its deliberations about charges of "Crimes against Humanity" against the members of the Sri Lanka Government and its military establishment. This act is even more unpalatable when one takes into account that the LTTE released as an act of goodwill, seven Sri Lankan Prisoners of War the day before totally unharmed.

We appeal to the International Community to act now to ensure the safety and basic needs of the displaced people who are suffering in the prison camps of the Sri Lankan military. The onus is now on the International Community to see that further war crimes and crimes against humanity are not committed on Tamils by the Sri Lankan state and to force the Sri Lankan state to yield in to the political aspirations of the Tamil people.

Source : http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29409

March 11, 2009

கென்னிய நாட்டவரால் பாட பெற்ற நமது ஜன கன மன

நமது நாட்டு தேசிய கீதம் கென்னிய நாட்டவரால் பாட பெற்றால் எப்படி இருக்கும் ??.





பெரும் முயற்சி எடுத்து பாடிய கென்னிய சகோதர , சகோதரிகளுக்கு எப்படி நன்றிசொல்லுவது ?? . இந்த பட தொகுப்பை பார்த்த பின் , எனது கண்கள் நிறைந்தன என்னை அறியாமல்.

March 4, 2009

உன்னை காணும் வரை

கவிதை எழுதுவது கடினம் என்றிருந்தேன்
உன் பெயரை எழுதும் வரை ...

குயில்களுக்கு அழகில்லை என்றிருந்தேன்
உன் குரலை கேட்கும் வரை ...

மின்னல்கள் கார் காலத்தில் மட்டும் தான் என்றிருந்தேன்
உன் கண்களை காணும் வரை ...

தனிமையை வெறுத்திருந்தேன்
உன் நினைவு வரும் வரை ...

வெற்றிகளே வாழ்வின் இன்பம் என்றிருந்தேன்
உன்னிடம் தோற்கும் வரை ...

தென்றலுக்கு உருவம்மில்லை என்றிருந்தேன்
உன்னை காணும் வரை ...


- பித்தன்
கவிதை எழுதுவது கடினம் என்றுருந்தேன்
உன் பெயரை எழுதும் வரை ...

குயில்களுக்கு அழகில்லை என்றுருந்தேன்
உன் குரலை கேட்கும் வரை ...

தனிமையை வெறுத்துருந்தேன்
உன் நினைவு வரும் வரை ...

மின்னல்கள் கார் காலத்தில் மட்டும் தான் என்றுருந்தேன்
உன் கண்களை காணும் வரை ...

வெற்றிகளே வாழ்வின் இன்பம் என்றுருந்தேன்
உன்னிடம் தோற்கும் வரை ...

தென்றலுக்கு உருவமில்லை என்றுருந்தேன்
உன்னை காணும் வரை ...

எங்கள் உறவுகளை அழிக்கலாம்

எங்கள் உறவுகளை அழிக்கலாம் ,
உணர்வுகளை என்ன செய்வீர்கள்
??

எங்கள் உரிமைகளை நசுக்கலாம் ,
உண்மைகளை என்ன
செய்வீர்கள் ??

எங்கள் மக்களை சிறை வைக்கலாம் ,
மனதினை என்ன
செய்வீர்கள் ??

தோழா !
நாங்கள் கற்பூர தீபம் அல்ல ..
ஊதினால் அணைவதற்கு
நாங்கள் காட்டு தீ ..
ஊத ஊத கொழுந்து விட்டு வளர்வோம் ..
ஏன் என்றால் நாங்கள் புதைக்கபடுவதில்லை
விதைக்க படுகிறோம் !!


- பித்தன்

February 22, 2009

யாரடி நீ

யாரடி நீ ...
முகம் காட்ட மறுக்கிறாய் ...
மனதில் மதி நிலவாய் மலர்கிறாய் ...

யாரடி நீ ...
எனது நினைவுகளில் நிறைகிறாய்
...
இருந்தும் மனதில் குறை என வதைக்கிறாய் ...

யாரடி நீ ...
இதயத்தை துடிக்கவும் வைக்கிறாய் ...
துடிப்பை நிறுத்தவும் செய்கிறாய் ...

யாரடி நீ ..
மனதுக்கு சிறகுகளை கொடுக்கிறாய் ..
உன் நினைவால் மனதை சிறையும் வைக்கிறாய் ...

யாரடி நீ ...
என்னுள் உன்னை காண்கிறேன் ,,
உன்னால் என்னுள் என்னை தேடுகிறேன் ...

மனம் இருந்தால் உன் முகம் காட்டு ...
பரிசாக உலகத்தை வென்று காட்டுகிறேன் .

February 12, 2009

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா !


எனது மனம் கவர்ந்த பாரதியார் கவிதைகளில் ஒன்று !!!

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா !
செல்வ களஞ்சியமே !
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய் !

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா !
பேசும்பொற் சித்திரமே !
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந் தேனே !

ஓடி வருகையிலே - கண்ணம்மா !
உள்ளங் குளிரு தடீ !
அடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ !

உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடீ !
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
மேனி சிலர்க்குதடீ !

கண்ணத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ !
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா !
உன்மத்த மகுதடீ !

சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
சஞ்சல மாகு தடீ !
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ !

உன்கண்ணில் நீர்வழிந்தால் - எந்நெஞ்சில்
உதிரம் கொட்டு தடீ !
எங்கண்ணிற் பாவையன்றோ ? - கண்ணம்மா !
என்னுயிர் நின்ன தன்றோ ?

சொல்லும் மழலையிலே - கண்ணம்மா
துன்பங்கள் திர்த்திடு வாய்
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய் ,

இன்ப கதைகளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ ?

மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ ?
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ ?

- பாரதியார்

February 7, 2009

உங்களுக்கு தெரியமா ??

இந்த செய்தி உங்களில் பல பேருக்கு தெரிந்து இருக்கலாம் , ஆனாலும் இன்னைக்கு சொல்ல ஒன்னும் இல்லாதது நாலும் , இந்த செய்தியின் முக்கியதுவத்தினாலும் , இதை பதியிறேன் ...

நம்ப தமிழ்நாடு அரசாங்கம் , ஒரு நல்ல காரியம் பண்ணி இருக்கு . அது என்ன என்றால் முதலாம் வகுப்பு முதல் பணிரெண்டம் வகுப்பு வரை அனைத்து பாட புத்தகங்களை PDF
தொகுப்புகளாக வெளியிட்டு உள்ளனர் .

வலை முகவரி : http://www.textbooksonline.tn.nic.in/ .

நமக்கு தெரிந்தவர்கள் யாரேனும் பரிச்சை நேரத்தில் , புத்தகத்தை தொலைத்து விட்டால் இனி கவலை பட வேண்டாம் ;) ( நான் நிறைய முறை தொலைத்து , வீட்டில் உதை வாங்கி இருக்கேன் ) .

மேலும் வெளி நாடுகளில் இருக்கும் நண்பர்கள் , தமது குழந்தைகளுக்கு தமிழ் கற்று தர எண்ணினால் , இந்த புத்தகங்களை பயன் படுத்தி கொள்ளலாம். இல்லை என்றால் பொழுது போகாத நேரங்களில் நமது அறிவை இந்த புத்தகங்கள் மூலம் சோதித்து கொள்ளலாம்.


பித்தன்

February 4, 2009

இரயலில் பயண விரும்பிகளுக்கு...

இரயலில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு , இந்த பக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் ..

வலை முகவரி : http://www.cleartrip.com/trains/calendar .

மிக எளிமையாக 15 நாட்கள் வரை , முன்பதிவுகளின் நிலவரத்தை காண முடிகிறது .
ஒரு முறை முயன்று தான் பாருங்களேன் :) ....

பித்தன்

February 3, 2009

கூகிள் - தமிழ்நாட்டில் இன்டர்நெட் விழிப்புணர்வு பேருந்து பயணம்


நமது தமிழ்நாட்டில் , இன்டர்நெட் -யை பற்றிய விழிப்புணர்வு பேருந்து பயணத்தை , அந்த நிறுவனம் இன்று துவக்கி உள்ளது . இப்பயணம் Feb 3 தொடங்கி Mar 13 வரை நடைபெற உள்ளது.

நமது மாநிலத்தில் உள்ள வெவ்வேறு நகரங்களுக்கு சென்று , இன்டர்நெட் -யை பற்றிய செயல் விளக்கங்களை கொடுக்க உள்ளது . உங்களது நண்பர்கள் அந்த ஊர்கலில் இருந்தால் , இதனை பயன்படுத்தி கொள்ள சொல்லுங்கள் . மேலும் இந்த செய்தியை ,
இன்டர்நெட் -யை பற்றி அறிய விரும்பும் மக்களுக்கு அடைய செய்யுங்கள்.

அந்த பயணத்தின் அட்டவணைக்கு இங்கே சொடுக்கவும்.

பித்தன்

January 31, 2009

ஒ மனமே !! ஒ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ???

கனத்த மனதோடு நான் போராடும் போது ..உதவி புரியும் பாடல்களில் இதுவும் ஒன்று ..

---------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒ மனமே !! ஒ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ???
ஒ மனமே !! ஒ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ??

மழையை தானே யாசித்தோம் , கண்ணீர் துளிகளை தந்தது யார் ?
பூக்கள் தானே யாசித்தோம் , கூளாம் கற்களை எரிந்தது யார் ?

ஒ மனமே !! ஒ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ???
ஒ மனமே !! ஒ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ??

மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து வானத்தில் உறங்கிட ஆசை அடி ..
நம் ஆசை உடைத்து , நார் நாராய் கிழித்து முள்ளுக்குள் ஏறிந்தது காதலடி (காலமடி) ...
கனவுக்குள்ளே காதலை தந்தாய் , கணுக்கள் தோறும் முத்தம் ..
கனவு கலைந்து எழுந்து பார்த்தால் , கைகள் முழுக்க ரத்தம்..
துளைகள் இன்றி நாயனமா ..தோழ்விகள் இன்றி பூரணமா ...


ஒ மனமே !! ஒ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ???
ஒ மனமே !! ஒ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ??

இன்பத்தில் பிறந்து , இன்பத்தில் வளர்ந்து , இன்பத்தில் மடிந்தவன் யாரும் இல்லை ...
துன்பத்தில் பிறந்து , துன்பத்தில் வளர்ந்து , துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை ...
இன்பம் பாதி , துன்பமும் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம்...
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் நகையாய் மாறும் தங்கம் ..
தோழ்வியும் கொஞ்சம் வேண்டும்மடி , வெற்றிக்கு அதுவே ஏணியடி ...

ஒ மனமே !! ஒ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ???
ஒ மனமே !! ஒ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ??

மழையை தானே யாசித்தோம் , கண்ணீர் துளிகளை தந்தது யார் ?
பூக்கள் தானே யாசித்தோம் , கூளாம் கற்களை எறிந்தது யார் ?
யாரோ மனமே !! ஒ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ???
ஒ மனமே !! ஒ மனமே !!


படம் : உள்ளம் கேக்குமே

January 30, 2009

முத்துகுமரன் - நாம் செய்ய வேண்டியது என்ன ???

நாம் செய்ய வேண்டியது என்ன ???

தோழர் முத்துகுமாரின் செயலை , என்னால் தியாகம் என்று ஒப்புக்கொள்ள இயலவில்லை . அவ்வாறு ஒப்பு கொண்டால் , அதை நாம் ஆதரிக்கிறோம் என்ன ஆகிவிடும். நாம் இனியும் இவரை போன்று பற்று உள்ளவர்களை இழக்க கூடாது .

சில பதிவுகளில் இவரது செயல் கொச்சை படுத்த படுவதை கண்டு , எனக்கு எனது சமுகம் மீது தீராத கோபத்தை உண்டாக்குகிறது. சிலர் இவரது மூலை சலவை செய்ய பட்டு இருக்கலாம் என்றும் , சிலர் இவர் பணம் வாங்கி இருக்கலாம் என்றும் , இன்னும் சிலர் இவர் தனது கட்சியை மட்டும் குறை சொல்லுகிறார் ,மற்ற கட்சியை குறை சொல்லவில்லை எனவும் வாதிடுகிறார்கள். இந்த சமுகத்திர்ற்காக இப்படி ஒரு உயிர் பலி தேவையா ?? . எதனால் அவர் இறந்தால் என்ன ??, இறந்தது நம்மவர் அல்லவா ??

அவர் எதனால் இந்த முடிவிக்கு வந்தால் என்ன , அவர் உயிர் இழந்தது நமக்காக அல்லவா ?? . அவர் சிலரின் அரசியல் விளையாட்டுக்காக உயிர் இழந்து இருந்தாலும் , நாம் அந்த தூய உள்ளம் காண நினைத்தை நோக்கி நாம் செல்ல வேண்டாமா ???

நாம் ஈழ மக்களுக்கு நன்மை செய்ய எண்ணினால் , முதலில் முத்துக்குமரனை பற்றியும் அவரை இறக்க தூண்டிய , அவரது எண்ணத்தையும் உலகம் முழுதும் பரப்ப வேண்டும் .ஏன் இந்த செய்தி எந்த சர்வ தேச செய்தி தொகுப்பிலும் வர வில்லை ??? நமது நாட்டின் ஆங்கில நாளிதழ்கள் கூட , இதை ஒரு முக்கிய செய்திய வெளியிட இல்லை ( நடிகை , நடிகர்குள் இருக்கும் அந்தரங்கத்தை பற்றி பக்கம் பக்கம் பக்கமாக வெளியிடுவார்கள்) . நமக்குள் ஒப்பாரி வைப்பதுனால் என்ன பயன். அயர்லாந்தில் இருக்கும் நான் இந்த செய்தியை பதிவுகளின் மூலமே தெரிந்து கொண்டேன் . எவ்வளவு பேர் தமிழ் பதிவுகளை படிபார்கள் ?? ஒருவரின் உயிர் தியாகம் அவ்வளவு மலிவாக போய்விட்டதா ???

பதிவு உலக நண்பர்களே வாருங்கள் , நம்மால் ஆனா முயற்சியை நாம் செய்வோம் .
ஈழத்து சகோதர்களே , நீங்கள் உலகம் எங்கும் நிறைந்து உள்ளிர்கள் ,உங்களது நாட்டின் முக்கிய நாளிதழில் இந்த செய்தியை வெளியட முயலுங்கள் . BBC போன்ற செய்தி நிறுவனங்களுக்கு இதை பற்றி (அவரது கடித்தையும் ) அனுப்ப முயலுவோம் . இதை படிபவர்களுக்கு எப்படி நாம் இதை எப்படி செய்யலாம் என்று தெரியுமானால் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் ..

வாருங்கள் நாம் ஒன்றிணைத்து , உலகுக்கு உரைப்போம் . ஒரு தனி மனிதனுக்கு
உணவு இல்லை என்றால் , ஜகத்தினை எரிப்போம் என்று சொன்னான் பாரதி ..ஒரு மனிதன் தன்னை எரித்து கொண்டான் , நாம் என்ன என்ன செய்ய போகிறோம் ??? ஏதும் முடியாவிட்டால் , இன்னும் ஒரு முத்துக்குமரனை யாவது இழக்காமல் பார்த்துகொள்வோம் .


பித்தன்

முத்துக்குமாரின் நியமான கோபங்கள் ...

முத்துகுமாரின் இறுதி கடிதம் . தன்னை மாயித்து கொண்ட ஒரு மனிதனின் நியமான கோபங்களை பாருங்கள் . இவரது கோபம் நியமானது . ஆனால் அதை வெளிபடுத்திய விதத்தை என்னால் ஏற்க்க முடியவில்லை . கடவுளே போதும் இனி ஒரு முத்துக்குமார் வேண்டாம். தன்மான உணர்வு தவறு என்றால் , எங்களை தன்மானம் அற்றவர்களாய் ஆக்கி விடு ..

நண்பர்களே தயவு செய்து இதை முழுதாக படிக்கவாவது செய்யுங்கள்
.

------------------- முத்துகுமாரின் கடிதம் ---------------------------------------------------------------------

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட .நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் .சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி. போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99