February 22, 2009

யாரடி நீ

யாரடி நீ ...
முகம் காட்ட மறுக்கிறாய் ...
மனதில் மதி நிலவாய் மலர்கிறாய் ...

யாரடி நீ ...
எனது நினைவுகளில் நிறைகிறாய்
...
இருந்தும் மனதில் குறை என வதைக்கிறாய் ...

யாரடி நீ ...
இதயத்தை துடிக்கவும் வைக்கிறாய் ...
துடிப்பை நிறுத்தவும் செய்கிறாய் ...

யாரடி நீ ..
மனதுக்கு சிறகுகளை கொடுக்கிறாய் ..
உன் நினைவால் மனதை சிறையும் வைக்கிறாய் ...

யாரடி நீ ...
என்னுள் உன்னை காண்கிறேன் ,,
உன்னால் என்னுள் என்னை தேடுகிறேன் ...

மனம் இருந்தால் உன் முகம் காட்டு ...
பரிசாக உலகத்தை வென்று காட்டுகிறேன் .

1 comment:

Anonymous said...

Indha mayakkathuku yaar kaaranamo!!!!