January 30, 2009

முத்துகுமரன் - நாம் செய்ய வேண்டியது என்ன ???

நாம் செய்ய வேண்டியது என்ன ???

தோழர் முத்துகுமாரின் செயலை , என்னால் தியாகம் என்று ஒப்புக்கொள்ள இயலவில்லை . அவ்வாறு ஒப்பு கொண்டால் , அதை நாம் ஆதரிக்கிறோம் என்ன ஆகிவிடும். நாம் இனியும் இவரை போன்று பற்று உள்ளவர்களை இழக்க கூடாது .

சில பதிவுகளில் இவரது செயல் கொச்சை படுத்த படுவதை கண்டு , எனக்கு எனது சமுகம் மீது தீராத கோபத்தை உண்டாக்குகிறது. சிலர் இவரது மூலை சலவை செய்ய பட்டு இருக்கலாம் என்றும் , சிலர் இவர் பணம் வாங்கி இருக்கலாம் என்றும் , இன்னும் சிலர் இவர் தனது கட்சியை மட்டும் குறை சொல்லுகிறார் ,மற்ற கட்சியை குறை சொல்லவில்லை எனவும் வாதிடுகிறார்கள். இந்த சமுகத்திர்ற்காக இப்படி ஒரு உயிர் பலி தேவையா ?? . எதனால் அவர் இறந்தால் என்ன ??, இறந்தது நம்மவர் அல்லவா ??

அவர் எதனால் இந்த முடிவிக்கு வந்தால் என்ன , அவர் உயிர் இழந்தது நமக்காக அல்லவா ?? . அவர் சிலரின் அரசியல் விளையாட்டுக்காக உயிர் இழந்து இருந்தாலும் , நாம் அந்த தூய உள்ளம் காண நினைத்தை நோக்கி நாம் செல்ல வேண்டாமா ???

நாம் ஈழ மக்களுக்கு நன்மை செய்ய எண்ணினால் , முதலில் முத்துக்குமரனை பற்றியும் அவரை இறக்க தூண்டிய , அவரது எண்ணத்தையும் உலகம் முழுதும் பரப்ப வேண்டும் .ஏன் இந்த செய்தி எந்த சர்வ தேச செய்தி தொகுப்பிலும் வர வில்லை ??? நமது நாட்டின் ஆங்கில நாளிதழ்கள் கூட , இதை ஒரு முக்கிய செய்திய வெளியிட இல்லை ( நடிகை , நடிகர்குள் இருக்கும் அந்தரங்கத்தை பற்றி பக்கம் பக்கம் பக்கமாக வெளியிடுவார்கள்) . நமக்குள் ஒப்பாரி வைப்பதுனால் என்ன பயன். அயர்லாந்தில் இருக்கும் நான் இந்த செய்தியை பதிவுகளின் மூலமே தெரிந்து கொண்டேன் . எவ்வளவு பேர் தமிழ் பதிவுகளை படிபார்கள் ?? ஒருவரின் உயிர் தியாகம் அவ்வளவு மலிவாக போய்விட்டதா ???

பதிவு உலக நண்பர்களே வாருங்கள் , நம்மால் ஆனா முயற்சியை நாம் செய்வோம் .
ஈழத்து சகோதர்களே , நீங்கள் உலகம் எங்கும் நிறைந்து உள்ளிர்கள் ,உங்களது நாட்டின் முக்கிய நாளிதழில் இந்த செய்தியை வெளியட முயலுங்கள் . BBC போன்ற செய்தி நிறுவனங்களுக்கு இதை பற்றி (அவரது கடித்தையும் ) அனுப்ப முயலுவோம் . இதை படிபவர்களுக்கு எப்படி நாம் இதை எப்படி செய்யலாம் என்று தெரியுமானால் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் ..

வாருங்கள் நாம் ஒன்றிணைத்து , உலகுக்கு உரைப்போம் . ஒரு தனி மனிதனுக்கு
உணவு இல்லை என்றால் , ஜகத்தினை எரிப்போம் என்று சொன்னான் பாரதி ..ஒரு மனிதன் தன்னை எரித்து கொண்டான் , நாம் என்ன என்ன செய்ய போகிறோம் ??? ஏதும் முடியாவிட்டால் , இன்னும் ஒரு முத்துக்குமரனை யாவது இழக்காமல் பார்த்துகொள்வோம் .


பித்தன்

1 comment:

umayalrakesh said...

வணக்கம் அன்ன , உங்கள் உளாரல்கள் அன்னைத்தும் அற்புதம். உங்கள் செய்திகள் பயனுள்ளதாக
இருந்தது. உங்களுடைய முயற்சிக்கு என்னுடைய மனமர்த பாராட்டுகள்.