March 4, 2009

கவிதை எழுதுவது கடினம் என்றுருந்தேன்
உன் பெயரை எழுதும் வரை ...

குயில்களுக்கு அழகில்லை என்றுருந்தேன்
உன் குரலை கேட்கும் வரை ...

தனிமையை வெறுத்துருந்தேன்
உன் நினைவு வரும் வரை ...

மின்னல்கள் கார் காலத்தில் மட்டும் தான் என்றுருந்தேன்
உன் கண்களை காணும் வரை ...

வெற்றிகளே வாழ்வின் இன்பம் என்றுருந்தேன்
உன்னிடம் தோற்கும் வரை ...

தென்றலுக்கு உருவமில்லை என்றுருந்தேன்
உன்னை காணும் வரை ...

No comments: