விழி வழியே , விழி வழியே , உயிர் வழியக் கண்டேனே ..
என் முன்னே , என் முன்னே , என் மனதைக் கண்டேனே ..
விழி வழியே என் உயிர் வழிந்தாலும்
என் மனமும் நிறைவது எப்படி ??
குறைய குறைய நிறையும் உயிரை
உன் நினைவும் கொடுப்பது எப்படி ??
விழி வழியே . விழி வழியே மனம் கசியக் கண்டேனே ,,
கண் முன்னே , கண் முன்னே , என் கனவைக் கண்டேனே .,
உன்னை பற்றி நினைப்பது எல்லாம்
இந்த நிலவுக்கும் எப்படி தெரியும் ???
அந்த நினைவுகள் மனதில் மறையும் முன்னே ,
அவை நிலவில் படமாய் தெரியும் ..
விழி வழியே , விழி வழியே ஓர் கவிதைக் கண்டேனே ..
மனம் முழுதும் ,மனம் முழுதும் அதன் பெயரை கொண்டேனே ..
நீயும் நானும் பேசுவது எல்லாம் ,
கடல் அலைக்கும் எப்படி தெரியும் ??
தனிமையில் நானும் நடக்கையில்
அவைகளும் உன் போல் என்னிடம் பேசும் ..
விழி வழியே , விழி வழியே , உயிர் வழியக் கண்டேனே ..
என் முன்னே , என் முன்னே , என் மனதைக் கண்டேனே ..
- பித்தன்
அயன் பட பாடல் " விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் .." கேட்கும் பொழுது தோன்றியது :)
November 2, 2009
Subscribe to:
Posts (Atom)