காதல் சொல்லும் உன் கண்கள் போதும் ,
என் காலம் முழுதும் கவிதை பாட ..
நேசம் வீசும் உன் பார்வை போதும் ,
என் நெஞ்சம் முழுதும் பூஞ்சோலை ஆக ..
வாசம் வீசும் உன் சுவாசம் போதும் ,
என் வாசல் வந்து வசந்தம் வீச ...
காலம் முழுதும் உன் காதல் போதும்,
என் வாழ்க்கை முழுதும் வண்ணங்களாக்க ..
-பித்தன்
May 15, 2010
March 28, 2010
இன்னும் என்ன செய்ய போகிறாய் ?
மேகம் விரும்பா மழையாய் நான் இருந்தேன் ...
என்னில் ஒளியாய் நீ படர்ந்தாய் ...
எண்ணற்ற வண்ணங்களாய் மாறினேன் நான் .
துளைத் தின்ற கோலாய் நான் இருந்தேன் ...
என்னை தென்றலாய் நீ தழுவினாய்...
வருடும் மெல்லிசையாய் மாறினேன் நான் .
கரை வெறுக்கும் அலையாய் நான் இருந்தேன் ...
எனை விரும்பும் நிலவாய் நீ வந்தாய் ...
ஆனந்த பேரலையாய் மாறினேன் நான் .
-பித்தன்
February 15, 2010
காதல் துறவி
உயிரின் மேலுள்ள ஆசையினால்
உன் கண்களைப் பார்பதில்லை நான் ...
தமிழ்க் கவிதைகளின் மேலுள்ள ஆசையினால்
உன் பெயரைச் சொல்வதில்லை நான் ...
மலர்களின் மேலுள்ளஆசையினால்
உன் முகத்தினைப் பார்பதில்லை நான் ...
என் மனதின் மேலுள்ள ஆசையினால்
உன் சிரிப்பினைப் பார்பதில்லை நான் ...
என் நினைவுகளின் மேலுள்ள ஆசையினால்
உன் நிழலைக் கூட தொடுவதில்லை நான் ...
என் உறக்கத்தின் மேலுள்ள ஆசையினால்
உன்னை நினைப்பதில்லை நான் ...
உலகின் மேலுள்ள ஆசையினால்
உன்னைப் பார்பதில்லை நான் ...
துறவியாக அனைத்தையும் துறக்க வேண்டுமாம் ,
அவர்களுக்கு தெரியவில்லை உன்னைக் காதலித்தால் போதுமென்று !!!
-பித்தன்
உன் கண்களைப் பார்பதில்லை நான் ...
தமிழ்க் கவிதைகளின் மேலுள்ள ஆசையினால்
உன் பெயரைச் சொல்வதில்லை நான் ...
மலர்களின் மேலுள்ளஆசையினால்
உன் முகத்தினைப் பார்பதில்லை நான் ...
என் மனதின் மேலுள்ள ஆசையினால்
உன் சிரிப்பினைப் பார்பதில்லை நான் ...
என் நினைவுகளின் மேலுள்ள ஆசையினால்
உன் நிழலைக் கூட தொடுவதில்லை நான் ...
என் உறக்கத்தின் மேலுள்ள ஆசையினால்
உன்னை நினைப்பதில்லை நான் ...
உலகின் மேலுள்ள ஆசையினால்
உன்னைப் பார்பதில்லை நான் ...
துறவியாக அனைத்தையும் துறக்க வேண்டுமாம் ,
அவர்களுக்கு தெரியவில்லை உன்னைக் காதலித்தால் போதுமென்று !!!
-பித்தன்
February 14, 2010
என் மனம்
பொம்மை கடையுள் சிக்கிய குழந்தையாய்
என் மனம் ..
எதை எடுப்பது , எதை விடுப்பது ,
குழந்தையாய் நான் , நினைவுகளாய் நீ !!!!
பவுர்ணமி திங்களின் கடல் அலையாய்
என் மனம் ..
தொடவும் முடியவில்லை , விடவும் முடியவில்லை ,
அலையாய் நான் , நிலவாய் நீ !!!
மின்னலை முதலில் காணும் கண்களாய்
என் மனம் ..
பாதி கண்கள் மூடினாலும் , மீதி கண்கள் மின்னலை தேடும் ..
கண்களாய் நான் , மின்னலாய் நீ !!!
-பித்தன்
என் மனம் ..
எதை எடுப்பது , எதை விடுப்பது ,
குழந்தையாய் நான் , நினைவுகளாய் நீ !!!!
பவுர்ணமி திங்களின் கடல் அலையாய்
என் மனம் ..
தொடவும் முடியவில்லை , விடவும் முடியவில்லை ,
அலையாய் நான் , நிலவாய் நீ !!!
மின்னலை முதலில் காணும் கண்களாய்
என் மனம் ..
பாதி கண்கள் மூடினாலும் , மீதி கண்கள் மின்னலை தேடும் ..
கண்களாய் நான் , மின்னலாய் நீ !!!
-பித்தன்
Subscribe to:
Posts (Atom)