February 15, 2010

காதல் துறவி

உயிரின் மேலுள்ள ஆசையினால்
உன் கண்களைப் பார்பதில்லை நான் ...

தமிழ்க் கவிதைகளின்
மேலுள்ள ஆசையினால்
உன் பெயரைச் சொல்வதில்லை நான் ...

மலர்களின்
மேலுள்ளஆசையினால்
உன் முகத்தினை
ப் பார்பதில்லை நான் ...

என் மனதின்
மேலுள்ள ஆசையினால்
உன் சிரிப்பினை
ப் பார்பதில்லை நான் ...

என் நினைவுகளின்
மேலுள்ள ஆசையினால்
உன் நிழலைக் கூட தொடுவதில்லை நான்
...

என் உறக்கத்தின்
மேலுள்ள ஆசையினால்
உன்னை நினைப்பதில்லை நான்
...

உலகின்
மேலுள்ள ஆசையினால்
உன்னைப் பார்பதில்லை நான் ...

துறவியாக அனைத்தையும் துறக்க வேண்டுமாம் ,
அவர்களுக்கு தெரியவில்லை உன்னை
க் காதலித்தால் போதுமென்று !!!

-பித்தன்

February 14, 2010

என் மனம்

பொம்மை கடையுள் சிக்கிய குழந்தையாய்
என் மனம் ..
எதை எடுப்பது , எதை விடுப்பது ,
குழந்தையாய் நான் , நினைவுகளாய் நீ !!!!

பவுர்ணமி திங்களின் கடல் அலையாய்
என் மனம் ..
தொடவும் முடியவில்லை , விடவும் முடியவில்லை ,
அலையாய் நான் , நிலவாய் நீ !!!

மின்னலை முதலில் காணும் கண்களாய்
என் மனம் ..
பாதி கண்கள் மூடினாலும் , மீதி கண்கள் மின்னலை தேடும் ..
கண்களாய்
நான் , மின்னலாய் நீ !!!

-பித்தன்