March 4, 2009

உன்னை காணும் வரை

கவிதை எழுதுவது கடினம் என்றிருந்தேன்
உன் பெயரை எழுதும் வரை ...

குயில்களுக்கு அழகில்லை என்றிருந்தேன்
உன் குரலை கேட்கும் வரை ...

மின்னல்கள் கார் காலத்தில் மட்டும் தான் என்றிருந்தேன்
உன் கண்களை காணும் வரை ...

தனிமையை வெறுத்திருந்தேன்
உன் நினைவு வரும் வரை ...

வெற்றிகளே வாழ்வின் இன்பம் என்றிருந்தேன்
உன்னிடம் தோற்கும் வரை ...

தென்றலுக்கு உருவம்மில்லை என்றிருந்தேன்
உன்னை காணும் வரை ...


- பித்தன்

1 comment:

Maran said...

வெற்றிகளே வாழ்வின் இன்பம் என்றிருந்தேன்
உன்னிடம் தோற்கும் வரை ...

தென்றலுக்கு உருவம்மில்லை என்றிருந்தேன்
உன்னை காணும் வரை ...

-- Nice