May 15, 2010

காலம் முழுதும் உன் காதல் போதும் !!

காதல் சொல்லும் உன் கண்கள் போதும் ,
என் காலம் முழுதும் கவிதை பாட ..

நேசம் வீசும் உன் பார்வை போதும் ,
என் நெஞ்சம் முழுதும் பூஞ்சோலை ஆக ..

வாசம் வீசும் உன் சுவாசம் போதும் ,
என் வாசல் வந்து வசந்தம் வீச ...

காலம் முழுதும் உன் காதல் போதும்,

என் வாழ்க்கை
முழுதும் வண்ணங்களாக்க ..

-பித்தன்

No comments: