கண்ணே , என் கனியமுதே ,
ஏன் இந்த மனதிற்கு இன்னும் புரியவில்லை ....
நீயென்றால் , நானென்று ,
தன் வாலை தேடும் நாய் குட்டி போல ..
தன்னை தானே தேடி அலைகிறது ....
பார்க்கும் இடமெல்லாம் நீ ...
இருந்தும் உனை பார்க்க துடிக்கிறது ..
தொலை தூரத்தில் நீ ...
இருந்தும் தொட்டணைக்க துடிக்கிறது ...
கடல் முழுதும் நீர் இருந்தாலும் ...
கடல் நடுவே , அதன் நீரால் தாகம் தணியாது ....
மனம் முழுதும் நீ இருந்தும் ..
உன் நினைவால் ஏங்குகிறது ...
ஆக்க பொறுத்த மனம் ....
ஆற பொறுக்க மறுக்கிறது ...
காலம் கனியும் வரை காத்திருக்க மறுக்கிறது ..
ஏன் இந்த மனதிற்கு இன்னும் புரியவில்லை ....
கட்டியணைப்பது மட்டும் காதல் இல்லை ....
உனக்காக காத்திருப்பதும் காதல் தான் என்று ...
என் மனதுக்கு எடுத்துரைபாய் கண்ணே ..
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் , ஓருயிர் நாமென்று ....
காதல் செழிக்க , வெறும் கனவுகள் மட்டும் போதாதென்று ...
கடமையை மறந்த காதல் கரை சேராதென்று ...
காலம் வரும் வரை கடமையை செய்திருப்போம் ...
மனங்கள் ஒன்றினைந்த பின் , காதல் பறைசாற்ற
கரங்கள் ஒன்றிணைய காத்திருக்க தேவையில்லை ..
கடமை நன்றாட்டி காதல் பறைசாற்றிருப்போம் ....
வாழ்க நம் காதல் பல்லாண்டு !!
-பித்தன்
June 30, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment