March 28, 2010

இன்னும் என்ன செய்ய போகிறாய் ?


மேகம் விரும்பா மழையாய் நான் இருந்தேன் ...
என்னில் ஒளியாய் நீ படர்ந்தாய் ...
எண்ணற்ற வண்ணங்களாய் மாறினேன் நான் .

துளைத் தின்ற கோலாய் நான் இருந்தேன் ...
என்னை தென்றலாய் நீ தழுவினாய்...
வருடும் மெல்லிசையாய் மாறினேன் நான் .

கரை வெறுக்கும் அலையாய் நான் இருந்தேன் ...
எனை விரும்பும் நிலவாய் நீ வந்தாய் ...
ஆனந்த பேரலையாய் மாறினேன் நான் .

-பித்தன்









No comments: