உயிரின் மேலுள்ள ஆசையினால்
உன் கண்களைப் பார்பதில்லை நான் ...
தமிழ்க் கவிதைகளின் மேலுள்ள ஆசையினால்
உன் பெயரைச் சொல்வதில்லை நான் ...
மலர்களின் மேலுள்ளஆசையினால்
உன் முகத்தினைப் பார்பதில்லை நான் ...
என் மனதின் மேலுள்ள ஆசையினால்
உன் சிரிப்பினைப் பார்பதில்லை நான் ...
என் நினைவுகளின் மேலுள்ள ஆசையினால்
உன் நிழலைக் கூட தொடுவதில்லை நான் ...
என் உறக்கத்தின் மேலுள்ள ஆசையினால்
உன்னை நினைப்பதில்லை நான் ...
உலகின் மேலுள்ள ஆசையினால்
உன்னைப் பார்பதில்லை நான் ...
துறவியாக அனைத்தையும் துறக்க வேண்டுமாம் ,
அவர்களுக்கு தெரியவில்லை உன்னைக் காதலித்தால் போதுமென்று !!!
-பித்தன்
February 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Nice theme. :-)
Post a Comment