February 14, 2010

என் மனம்

பொம்மை கடையுள் சிக்கிய குழந்தையாய்
என் மனம் ..
எதை எடுப்பது , எதை விடுப்பது ,
குழந்தையாய் நான் , நினைவுகளாய் நீ !!!!

பவுர்ணமி திங்களின் கடல் அலையாய்
என் மனம் ..
தொடவும் முடியவில்லை , விடவும் முடியவில்லை ,
அலையாய் நான் , நிலவாய் நீ !!!

மின்னலை முதலில் காணும் கண்களாய்
என் மனம் ..
பாதி கண்கள் மூடினாலும் , மீதி கண்கள் மின்னலை தேடும் ..
கண்களாய்
நான் , மின்னலாய் நீ !!!

-பித்தன்

No comments: